இலங்கையின் வெளிநாட்டு ஒழுக்கமானது 1.5 பில்லியன் டொலருக்கும் குறைவான மட்டத்தில் இருக்கின்றது.
இது மிகவும் ஆபத்தான கட்டம் என நிதி அமைச்சர் அலி சப்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலைமைக்கு முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட குழுவுக்கு இடையிலான முரண்பாடுகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.