Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீக்காயங்களுடன் பெண் மரணம்: கணவன் கைது

தீக்காயங்களுடன் பெண் மரணம்: கணவன் கைது

அளவெட்டியில் குடும்ப பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி தீக்காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles