எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ஒரு பகுதி மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் எரிபொருளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.