இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளுக்காக பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக அந்தநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருடன் கலந்துரையாடியது.
இதன்போது, குறித்த துறையில் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துவதற்கு அந்தக் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.