பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 6.45 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.