சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் இன்று (21) காலை பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது,
கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.