பண்டிகை காலத்தில் 3 நாட்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதற்காக, பெருமளவான எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது.
இதனால் எதிர்வரும் 3 தினங்களுக்கு (12, 13, 14) எரிபொருளை வாளிகள் போன்ற கொள்கலன்களில் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க இதனை அறிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த தினங்களில் மண்ணெண்ணெய்யை வாளி கலன்களில் கொள்வனவு செய்ய தடையில்லை என்றும் அவர் கூறினார்.