செய்திகள்உள்நாட்டுலொறி சில்லில் சிக்கி 7 வயது சிறுவன் பலி - யாழில் சம்பவம்

லொறி சில்லில் சிக்கி 7 வயது சிறுவன் பலி – யாழில் சம்பவம்

யாழ்.நகர் பகுதியில் லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் (7) ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றது.

தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் சென்ற லொறி மோதியதில், குறித்த சிறுவன் லொறி சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைதானதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles