Wednesday, May 6, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்

வாகன விபத்தில் இருவர் பலி: ஒருவர் காயம்

தொம்பே, மாலிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட 3 பேர் பயணித்துள்ளதுடன், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த ஏனைய இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கடற்படை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles