டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி மூன்று பில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் டொலர் வீழ்ச்சியடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப டொலரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறிய இராஜாங்க அமைச்சர், இறக்குமதி அதிகரிக்கும் போது டொலருக்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் வலியுறுத்தினார்.