இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்களை கொண்டு வந்து மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் ஏற்கனவே தயார் செய்துள்ளதாக மின்சார ஊழியர் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.