முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை உடல் மீது வீழ்ந்ததில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த மூன்று வயதுடைய குறித்த சிறுவன், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.