Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிறும் மீன் விலை

எகிறும் மீன் விலை

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சூழவுள்ள சூறாவளி நிலை காரணமாக மீன்பிடி தொழில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தையின் செயலாளர் என்.ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 400 டன் மீன்கள் வந்தாலும், இந்த நாட்களில் 100 டன்களுக்கும் குறைவான மீன்களே கிடைக்கின்றன எனவும், இதனால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவு 30 நிமிடங்களில் தீர்ந்துவிடும் எனவும், மீன் தட்டுப்பாடு காரணமாக பேலியகொடையில் இருந்து மீன்களை எடுத்துச் செல்லும் 50 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய மீன் கடைகள் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles