Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு75 இலட்சம் பேருக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை

75 இலட்சம் பேருக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை

நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 57 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களில் 33 வீதமானவர்கள் தற்போது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கையின் மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகளவான உணவுப் பாதுகாப்பற்ற மக்கள் வாழ்வதாகவும் மேலும், கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles