கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு கோரியுள்ளது.
மருத்துவ பீடத்தை கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கற்பிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பை பிராந்தியத்தில் கல்வி நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான வசதிகளை வழங்குவதும் இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பாகும். மேலும் ஆறு மாதங்களுக்குள் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.
அந்த காலகட்டத்தில் மாணவர்கள் டிப்ளொமா, பட்டம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.