வெல்லவாய வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார் எனவும் தெரிவிக்க்பபடுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.