Wednesday, January 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் விமானம் தாமதம்: தென்கொரிய வேலைவாய்ப்பை இழந்த 48 இலங்கையர்கள்

ஸ்ரீலங்கன் விமானம் தாமதம்: தென்கொரிய வேலைவாய்ப்பை இழந்த 48 இலங்கையர்கள்

தென்கொரியாவுக்கு பணியாளர்களாக செல்லவிருந்த 48 பேர் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 8.05க்கு தென்கொரியாவின் இச்சிகோனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 10 மணிநேரம் தாமதமாகியமையே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது

இதன் காரணமாக நேற்று (23) தென்கொரியாவிற்கு பணிக்காக செல்லவிருந்த 48 தொழிலாளர்களை கொரிய மனிதவள திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இந்த 48 தொழிலாளர்கள் தென் கொரியாவில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்பிடித் துறைகளின் கீழ் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் விமானத்தின் தாமதம் காரணமாக அவர்களை ஏற்க தென் கொரிய மனித வள திணைக்களம் மறுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles