Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வூதியம் வழங்குதலை துரிதப்படுத்த நடவடிக்கை

ஓய்வூதியம் வழங்குதலை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்குவதற்கும், அதற்கான வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓய்வூதியத் துறைக்கு திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தலைமையில் குழு கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஓய்வூதியம் பெறுவதற்கு நீண்ட கால அவகாசம் வழங்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்ட தலைவர், இது நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினை எனவும் இது தொடர்பில் அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles