Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தீ வைத்தல் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடிந்தபோதும், அவ்வாறு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த தவறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கலவரம் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்வதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles