பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் மந்தபோசணை கொண்ட 45 வரையிலான சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு வருட காலப்பகுதிக்கு போசணை நிறைந்த உணவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு பெற்றுக்கொடுத்தால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.