ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபை நேற்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறியஇ இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.
எனவே அதற்கு அனுமதி வழங்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் கோரியுள்ளது.
இதன்படி, ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுவதற்கான வழக்கை அழைப்பதற்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.