Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவத்தையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

கடவத்தை – தவட்டகஹவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

50 வயதுடைய சூரியபாலுவ பகுயை சேர்ந்தவரே துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவரின் மகன் உள்ளிட்ட மூவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்த கைத்துப்பாக்கி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணித்தகராறு காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles