சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அதனை மறுத்துள்ளார்.
தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் போதகர் ஜெரோமின் அலுவலகத்திலிருந்து தன்னை சந்திக்க அழைப்பு வந்ததால் ஒரே ஒருமுறை தான் அவரை சந்தித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Newswire