நாட்டில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலித்தீன் பைகளின் பாவனையினால் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு நான்கு பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதாகப் பல்பொருள் அங்காடிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 11 மில்லியன் மக்கள் தினசரி சந்தைக்குச் செல்வதாகவும், ஒருவர் மூன்று அல்லது நான்கு பொலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதாகவும் சரோஜனி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொலித்தீன் பைகளின் அதிகப்படியான பாவனை தொடருமானால் அவற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அப்படியானால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொலித்தீன் பைகள் பயன்படுத்த முடியாது எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.