தென் கடற்பரப்பில் இழுவை படகொன்றிலிருந்து சுமார் 125 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.