அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவகம் தற்போது டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்காக முன்னர் ஒரு சிகிச்சை பிரிவு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, அவர்களுக்கென மேலும் மூன்று சிகிச்சை பிரிவுகளை ஒதுக்க நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் தற்போது 66 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், வெளிநோயாளர் பிரிவுக்கு தினசரி வரும் நோயாளிகளில் 12 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் (16) இந்த வருடம் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.