சர்ச்சைக்குரிய போதகரான ஜெரொம் பெர்னாண்டோ, தனது ஆசிரியராகவும் ஆன்மீக குருவாகவும் தெரிவித்துள்ள, சிம்பாப்வேயை சேர்ந்த உபெர்ட் ஏஞ்சல் என்ற பாதிரியார் சர்வதேச அளவில் தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டவர் என அல் ஜசீரா ஆவணப்படம் மூலம் தெரியவந்துள்ளது.’
உபெர்ட் ஏஞ்சல், சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் ம்னங்காக்வாவுக்கு நெருக்கமானவர் எனவும், அந்நாட்டு அரசாங்கத்தின் சிறப்புத் தூதராக சர்வதேச அளவில் தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் அல் ஜசீரா டிவி புலனாய்வுப் பதிவு செய்திருந்தது.
போதகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் உபேர்ட் ஏஞ்சல், கடந்த 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இந்த வருடம் மார்ச் 19 ஆம் திகதி, போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுடன் இணைந்து கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்தில் கூட்டுச் சேவையை நடத்தினார்.
இந்நிலையில், சர்வகட்சி போராட்டக்காரர்கள் அமைப்பினர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.