இன்று (17) நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெப்பம் மனித உடலில் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள திணைக்களம், இதனை நீண்டகாலம் வெளிப்படுத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.