மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில், ‘ஹலோ குடும்பம்! உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் இப்போது உத்தியோகப்பூர்வ பயணங்களில் ஈடுபட்டு வருகின்றேன். கடமைகள் முடிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமை மீளவும் நாடு திரும்புவேன்’ என பதிவிட்டுள்ளார்.
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறான பதிவினை இட்டுள்ளார்.
