யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறை பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் சந்தேக நபர் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்துஅப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.