யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.