Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளத்தில் நடந்து சென்ற நபர் மாயம்

வெள்ளத்தில் நடந்து சென்ற நபர் மாயம்

மாவரல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தலுவ பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர் ஆந்தலுவ – கிவுல்ஹேன பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு திரும்பும் வேளையில் ஆந்தலுவ பாலத்திற்கு அருகில் குறித்த நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேச மக்களும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவரல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles