யாழ்ப்பாணத்தில் 3 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, கேரள கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் சென்றவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.