மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுின்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மோகா சூறாவளியின் தாக்கத்தினால் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.