வாரியபொல மினுவாங்கெட்டே பகுதியில் வயல் ஒன்றுக்கு அருகில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வயலுக்கு அருகில் உள்ள கண்ணிவெடி குழி ஒன்றில் இந்த இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும் நேற்று (10) முதல் காணாமல் போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.