Friday, June 20, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை இன்று (12) மாலை 6.30 மணி வரை அமலில் இருக்கும்.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பிரதேச செயலகப் பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு, கலி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles