கருங்கடல் வழியாக யுக்ரைனுக்கான தானிய ஏற்றுமதியை ரஷ்யா மீண்டும் அங்கீகரிக்கவில்லை என்றால், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
18ஆம் திகதிக்குப் பிறகு கருங்கடல் வழியாக யுக்ரைனுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தின் காலம் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் கோரிக்கை விடுத்தது.
ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.