இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Pருஊளுடு) தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்க மீதான விசாரணை அறிக்கை கடந்த மாதம் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.