Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்புலவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தப்புலவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர். மரிக்கார் நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில் அழைக்கப்பட்டார்.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles