Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

உத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

நேற்று (09) புனரின் சங்குபிட்டிய வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கெப் வண்டியை ஓட்டிய நபர் தோட்டாக்கள் தாக்கப்பட்ட போதிலும் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் சென்ற பின் புதர்கள் நிறைந்த பகுதியில் வண்டியை விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின் போது தப்பியோடிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புனரின் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் அப்பகுதியில் மரக்கடத்தல் தொடர்பான பல வழக்குகளை கொண்டுள்ளவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ​​சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புனரின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles