நேற்று (09) புனரின் சங்குபிட்டிய வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கெப் வண்டியை ஓட்டிய நபர் தோட்டாக்கள் தாக்கப்பட்ட போதிலும் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் சென்ற பின் புதர்கள் நிறைந்த பகுதியில் வண்டியை விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகளின் போது தப்பியோடிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புனரின் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் அப்பகுதியில் மரக்கடத்தல் தொடர்பான பல வழக்குகளை கொண்டுள்ளவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புனரின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.