பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1990-ம் ஆண்டு, நியூயார்க் துணிக்கடையில் ட்ரம்ப் தன்னை துன்புறுத்தியதாக ஜீன் கரோல் என்ற பத்திரிக்கையாளர் தொடுத்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மன்ஹாட்டன் நீதிமன்றம், ட்ரம்ப்பை குற்றவாளி என அறிவித்தது.
அதன்படி அந்த ஊடகவியலாளருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.