இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, ககோனின் தசங்கா கிராமத்தில் அமைந்துள்ள பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 50 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.