செய்திகள்உள்நாட்டுசனிக்கிழமையன்று 12,204 பேர் தாமரை கோபுரத்திற்கு வருகை

சனிக்கிழமையன்று 12,204 பேர் தாமரை கோபுரத்திற்கு வருகை

கடந்த சனிக்கிழமை (06) 12,204 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இது என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் 815,982 பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 13,057 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles