உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் நாளை (09) முதல் மீண்டும் பணிக்கு சமூகமளிக்க முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றறிக்கை ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (08) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்துவது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.