Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்தநிலையில் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 2.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles