Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசிய நபர் கைது

பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசிய நபர் கைது

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து மெட்ரோபாலிட்டன் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்,

பக்கிங்காம் அரண்மனையின் வாயிலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களுக்கான வெடிப்பொருளை அரண்மனைக்குள் வீசியெறிந்துள்ளார்.

மீண்டும் மீண்டும் அவர் அதைச் செய்த நிலையில் அவரை பாதுகாவலர்கள் மற்றும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

பின்னர் அந்தப் பொருட்களை சேகரித்து பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர்.

மர்ம நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிகழ்விடத்தில் வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles