யுக்ரைனில் இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான தகவல்களை ரஷ்யா சேகரித்து வருகிறது.
இதனை யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமர் செலென்ஸ்கி தெரிவித்தார்.
யுக்ரைனில் ரஷ்யா செய்த அனைத்து போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை தனது அதிகாரிகள் சேகரித்து வருவதாக அவர் கூறினார்.
யுக்ரைன் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.