Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிரைவில் தேர்தல்?

விரைவில் தேர்தல்?

தற்போது நாடாளுமன்றம் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் எட்டப்படும் எனவும், அதற்கு தேவையான நிதி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுமாயின் தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் 3 மாதங்களேனும் தேவைப்படும். வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக சுமார் 5 வாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் நடத்தப்படுமாயின் வாக்குச் சீட்டுகள் உட்பட ஏனைய ஆவணங்களை அச்சிடுவதற்கு தேவையானளவு கடதாசிகள் கையிருப்பில் உள்ளதாக அரச அச்சகத்தின் தலைவர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles