Monday, June 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு700 தாதியர்கள் நாட்டை விட்டு சென்றனர்

700 தாதியர்கள் நாட்டை விட்டு சென்றனர்

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியல் சுமார் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாதியர்களில் 550 பேர் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்று ஐந்தாண்டுகளுக்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், சுமார் 150 தாதியர்கள் வேலையை விட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தாதியர் சேவையில் தற்போது சுமார் 2,400 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் சாமிக்க கமகே தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles