Wednesday, February 25, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்பாதிரியாரின் சொல் கேட்டு பட்டினியால் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு

பாதிரியாரின் சொல் கேட்டு பட்டினியால் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு

கென்யாவில் பட்டினியால் உயிரிழந்து புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் ஷகாஹோலா காட்டில் ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டினியாக இருந்தால் இயேசுவிடம் செல்லலாம் என பாதிரியார் ஒருவர் கூறிய அறிவுரையை பின்பற்றியதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போதுஇ குறித்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது காவலில் இருந்த 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles